Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாமியார் மலையில் சிறப்பு பூஜைகள் மார்கழி உற்சவம்: அரிய உருப்படிகளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதநாராயண பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2014
12:01

தொட்டியம்: திருநாராயணபுரம் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவ தலமான, வேதநாராயணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று துவங்கியது. பெருமாள் நரசிங்க உருவமெடுத்து அசுரன் இரணியனை வதம் செய்த பின், கோபம் தீராத எம்பெருமாளை பிரகலாதன் சாந்தமான உருவத்தில் காட்சியளிக்க வேண்டிக் கொண்டார். பிரகாதனின் வேண்டுகோளை ஏற்று, பெருமாள் கோபம் தணிந்து திருநாராயணபுரத்தில் வேதநாராயணன் என்ற பெயருடன் உபநாச்சியார்களுடன் எழுந்தருளி, பள்ளி கொண்ட திருக்கோலத்தில் காட்சி அளித்தார். இதனால் இத்தலம் சதுர்வேதி மங்கலம், வேதபுரி, ஆதிரங்கம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, தற்போது திருநாராயணபுரம் என்ற பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மேலும், நான்கு வேதங்களையும் தலையணையாக கொண்டு பிரம்மாவுக்கு, வேத உபதேசம் செய்த திருத்தலமாகும். இதனால் இக்கோவில் பிரகலாத ஷேத்திரம் என்ற பெயர் பெற்றதாக புராணங்களில் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள வைணவ கோவில்களில் புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவிலில் கம்பத்தடியில் அமர்ந்துள்ள அனுமன் வேண்டுவோருக்கு, வேண்டிய வரம் அளிப்பவராகவும் காட்சியளிக்கிறார். பிரகலாதனுக்கு அருள் புரிந்தவராகவும், அடியார் அரையருக்கு மோட்சம் அளித்ததாலும், வேதனை தீர்க்கின்ற நாயகனாகவும் விளங்குகிறார். இத்திருத்தலத்தை வழிபடுவோருக்கு நல்ல கல்வி அமைதல், துன்பங்கள் நீங்குதல், தீ விபத்து மற்றும் தீக்காயம் குணமாதல், பெண்கள் திருமண தடை நீக்கவும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து என, 21 நாட்கள் நடக்கும் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆழ்வார்கள் தினமும் பாசுரங்கள் பாடி செல்ல, எம்பெருமாளின் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்து வருகிறது. பகல்பத்தில் நிறைவு நாளான வரும், 10ம் தேதி எம்பெருமான மோகனாவதாரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளிப்பார். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வாக எம்பெருமாள் வரும், 11ம் தேதி காலை ஐந்து மணிக்கு சொர்க்கவாசல் வழியாக ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதைத் தொடர்ந்து ராப்பத்து விழா நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
பல்லடம்; கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும் என, பல்லடம்‌, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar