திண்டிவனம்:திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை திந்திரிணீஸ்வரர் கோவிலில் உள்ள ஆத்மலிங்க ஆஞ்சனேய சுவாமிக்கு ஜெயந்தி விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும் முடிந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தீபாராதனை, பூஜைகளை ராதாகுருக்கள், பாலாஜி குருக்கள் செய்தனர். பக்தர்கள் வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.