Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணவாழ்வு தரும் மலர் மாலை! குடை, செருப்பு தானம் செய்யுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோழை குணம் மாற்று தோழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2014
03:01

*நம்புங்கள். ஆழமாக நம்புங்கள். நீங்கள் முன்னேறியே ஆக வேண்டும் என கடவுளே ஆணை பிறப்பித்து விட்டார்.
*கடவுளின் கையில், மனிதன் ஒரு கருவியாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான மகிழ்ச்சி பிறக்கும்.
*நீண்ட இரவு கழிந்து விட்டது. பகல் பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது, உங்களுக்கு வேண்டியதெல்லாம் உற்சாகம் மட்டுமே.
*எப்போதும் கடவுளை மட்டுமே சார்ந்திருங்கள். அப்போது தான் உங்களால் எதையும் எதிர்த்து நிற்கவும், சரியான பாதையில் செல்லவும் முடியும்.
*ஒழுக்க நெறியில் நில்லுங்கள். வெற்றி வீரனாகத் திகழுங்கள். முழுமனதுடன் கடமையில் ஈடுபடுங்கள். எல்லையற்ற துணிவுடன் செயலாற்றுங்கள்.
*வஞ்சனையால் ஒரு பணியையும் செய்ய இயலாது. அன்பாலும், உண்மையாக நடப்பதாலும் மட்டுமே நீங்கள் பேராற்றலைப் பெற முடியும்.
*இளைஞர்களே! நீங்கள் பெரும் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். நாய்களின் குரைப்பைக் கண்டு நடுங்காதீர்கள். வாழைப்பூ போல பூமி நோக்கி பார்க்க வேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.
*உங்களுக்குள் எல்லா ஆற்றலும் குவிந்து கிடக்கிறது. நீங்கள் பலசாலி என்பதை மறந்து விடக்கூடாது. சிங்கத்தைப் போன்ற வீரதீரமுள்ளவனையே திருமகள் நாடி வருகிறாள்.
*உழைக்கத் தொடங்குங்கள். உலகில் வந்து பிறந்து விட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் நன்மையை விட்டுச் செல்லுங்கள்.
*உள்ளுக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை எங்கும் வெளிப்படுத்துங்கள். அதைச் சுற்றி ஒவ்வொன்றும் அதற்கு இசைவாக ஒழுங்குடன் நடக்கத் தொடங்கும்.
*எல்லா உயிர்களும் கடவுளின் அம்சம் என்பது உண்மை தான். இருந்தாலும், அனைத்திலும் மேலான, உயர்ந்த கோயிலாக மனிதன் இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.
*மனம் கட்டுப்படாமல் இருப்பவன், யாருமின்றி காட்டிலோ, குகையிலோ வாழ்ந்து கூட பயனில்லை. மனம் வசப்பட்டு விட்டால், இருக்கும் இடத்திலேயே நல்ல சூழ்நிலையை ஒருவனால் உருவாக்கிக் கொள்ள முடியும்.
*எதையும் சரியான முறையில் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், உலகை அழகாகவோ, விகாரமாகவோ மாற்றும் சக்தி, மனதில் எழும் எண்ணத்திற்கு இருக்கிறது.
*உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் இருக்கிறது என்பதை நம்புங்கள். உலகில் காணும் அனைத்தும் புனிதமானது, அழகானது, நன்மை தர வல்லது என்று முழுமையாக நம்புங்கள்.
*சுற்றியுள்ள சூழ்நிலை உங்களைப் பயமுறுத்தலாம். துன்பம் மலையளவு கூட இருக்கலாம். ஆனால், எதற்கும் பயப்படுவது கூடாது. காலத்திற்கு எல்லை கிடையாது. திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்காமல், முன்னேறிச் செல்லுங்கள்.
*எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறி விடுவீர்கள். வலிமையானவர்களாக உங்களை எண்ணிக் கொண்டால், வலிமை மிக்கவராக மாறி விடமுடியும்.
*ஆசை, கோபத்துக்கு அடிமையாக இருக்காதீர்கள். இவற்றுக்கு அடிமையாக இருப்பவன், உண்மையான சுதந்திரத்தையோ, இன்பத்தையோ அனுபவிக்க முடியாது. -விவேகானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar