பதிவு செய்த நாள்
10
ஜன
2014
03:01
சபரிமலையில், மகர விளக்கு நாளில், 4,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என, கேரள கூடுதல் டி.ஜி.பி., ஹேமச்சந்திரன் கூறினார். அவர் கூறியதாவது: மூன்று நாட்களாக, பக்தர்கள் கூட்டம், எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக வந்துள்ளது. 18ம் படியில், ஒரு நிமிடத்தில், 70 - 90 பேர் ஏற்றப்படுகின்றனர். மகர விளக்கு நாளில், சன்னிதானம் மற்றும் பம்பையில், 4,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். தேவைப்பட்டால், கூடுதல் போலீசார் அனுப்பப்படுவர். புல்மமேட்டில், கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் தலைமையில், 1,250 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பத்தணந்திட்டா, இடுக்கி மாவட்டங்களில், மகர விளக்கு தெரியும் அனைத்து இடங்களிலும், பாதுகாப்பாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும். எர்ணாகுளத்தில், அய்யப்ப பக்தர்கள் வேன் மீது, குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, சபரிமலையில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.