சென்னிமலை: சென்னிமலையில் வரும் 17-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று முதல் 21-ஆம் தேதி இரவு நடைபெறும் மகாதரிசன நிகழ்ச்சி வரை தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்து செல்வர்.இதையொட்டி பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.