திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ கருட சேவை: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2026 06:04
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் வீரராகவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் மே மாதம் 1ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 3ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது. உற்சவர் வீரராகவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தில் வரும் 28ம் தேதி காலை தேரோட்டமும், 30ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.