Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் நாளை சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகளின் 92வது குருபூஜை விழா! சதானந்தபிரம்ம குருதேவதத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2014
12:01

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சக்கரத்தாள்வார் சன்னதியின் எதிரே உள்ள அனந்தசரஸ் குளத்தில், நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் துவங்கியது. மூன்று நாட்களாக நடை பெற்று வரும் உற்சவத்தில், முதல் நாளான நேற்று முன்தினம் வரதராஜபெருமாள், பெருந்தேவி தாயாருடன் அனந்தசரஸ் குளத்தில் உள்ள தெப்பலில்  இரவு 7:00 மணிக்கு, எழுந்தருளினார். மேலும், இண்டாம் நாளான நேற்று தெப்பலில் எழுந்தருளிய சுவாமி, குளத்தை 5 முறை வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், மூன்றாம் நாளான இன்றும் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஏற்பாடு செய்திருந்தார். இதேபோல், திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  இங்கு ஆண்டுதோறும் ரிஷப தீர்த்தக் குளத்தில் தைபூசத்தன்று தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக கோவில் திருப்பணி நடைபெற்றதினால் தெப்பல் திருவிழா நடைபெறவில்லை.  கடந்த செப்டம்பரில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தைபூசத்தில் தெப்ப உற்சவம் நடத்த இந்து அறநிலையத்துறையினர் முடிவுசெய்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் ரிஷப தீர்த்த குளத்தில் தெப்பத்தி்ல் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  தெப்பத்தில் திருமுறை இசை, நாதாஸ்வர இசை முழங்க குளத்தில் மூன்றுமுறை தெப்பத்தில் உலா வந்தார். நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar