பதிவு செய்த நாள்
24
ஜன
2014
11:01
பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில், 14 நாட்களில், இரண்டு கோடியே 29 லட்சத்து 46 ஆயிரத்து 675 ரூபாய் கிடைத்துள்ளது. பழநிகோயிலில் தைப்பூச விழா நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, நேற்று மலைக்கோயில், கார்த்திகை மண்டபத்தில், உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், வெளிநாட்டு கரன்சி 370, தங்கம் 664 கிராம், வெள்ளி 16 ஆயிரத்து 648 கிராமும், ரொக்கமாக இரண்டு கோடியே 29 லட்சத்து 46 ஆயிரத்து 675 ரூபாய் கிடைத்துள்ளது. இதில், தங்கம் மற்றும் வெள்ளியிலான, தாலி, மோதிரம், ஆள்ரூபம், பாதம், கைவிலங்கு, கொலுசுகள், காசுகள் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை தொடர்ந்து நடக்கிறது.