தேசமக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற உயர்ந்த தத்துவமே காசி- ராமேஸ்வர யாத்திரை. நாம் இங்கிருந்து காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, விஸ்வநாதரை தரிசித்து அங்கிருந்து கங்கைநீரைக் கொண்டு வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். வடநாட்டில் உள்ளவர்கள் ராமேஸ்வரம் வந்து, புனிதநீராடி ராமநாதரை தரிசித்து இங்குள்ள கடல் தீர்த்தத்தால் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் மூலம் யாத்திரை முழுமை பெறுவதோடு, தெய்வத்தின் திருவருளும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.