பதிவு செய்த நாள்
10
பிப்
2014
10:02
பாலமேடு: பாலமேட்டில், மாரியம்மன், வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கருப்பணசுவாமி, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், கன்னிமார், சிவலிங்கேஸ்வரர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டது. மறவபட்டி கே.ஜி., பாண்டியன், சிங்கமரெட்டி, சுந்தரம், செந்தில்வேல், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.