திருமலை: திருப்பதி கோவிலில் வரும் 12ம் தேதி தெப்ப உற்சவம் தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான 12ம்தேதி மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி 5 முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு 5 நாட்கள், வசந்த உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.