Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தர் கோவிலில் மண்டல பூர்த்தி விழா மழை வேண்டி 108 பால்குட ஊர்வலம்! மழை வேண்டி 108 பால்குட ஊர்வலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தடைகளை தகர்த்த ஹோலி கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 மார்
2014
11:03

பிருந்தாவன்:சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி., மாநிலம், பிருந்தாவனில் நடந்த, "ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில், முதல் முறையாக, 2,000க்கும் மேற்பட்ட விதவைகள் பங்கேற்றனர். ஒருவர் மீது ஒருவர், வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும், கவலைகளை மறந்து, உற்சாகமாக, ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

துவக்கம்: வட மாநிலங்களில், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, ஆண்டு தோறும், மார்ச் மாதத்தில், ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கொண்டாட்டம், இன்று துவங்கி, பல நாட்கள் நடக்கிறது.இந்த கொண்டாட்டத்தின்போது, அனைத்து தரப்பினரும், ஒருவர் மீது ஒருவர், வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும், மகிழ்ச்சி யை வெளிப்படுத்துவர்.இந்த பண்டிகையில், பெரும்பாலும், விதவை பெண்கள், அனுமதி அளிக்கப்படுவது இல்லை. பார்வையாளர்களாக கூட, அவர்களை பங்கேற்க அனுமதிப்பது இல்லை. இந்த பிரச்னைக்கு, "சுலப் என்ற, தன்னார்வ தொண்டு நிறுவனம், தீர்வு காண முயற்சித்தது.

ஏக்கம் தீர்ந்தது: காலம், காலமாக, விதவைகளின் அடிமனதில் படிந்துள்ள ஏக்கத்தை துடைக்கும் விதமாக, இந்தாண்டு ஹோலி பண்டிகையில், அவர்களை பங்கேற்க வைக்க, அந்த சமூக, தொண்டு அமைப்பு திட்டமிட்டது.உ.பி., மாநிலம், பிருந்தாவனில், இந்த கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடு முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட விதவை பெண்கள், இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டுஇருந்தனர்.

வண்ண புடவை: வெள்ளை புடவை அணிந்திருந்த அவர்கள், ஒருவர் மீது ஒருவர், வண்ணப் பொடிகளை தூவினர். தண்ணீர் துப்பாக்கிகளில், தண்ணீரை நிரப்பி, பீய்ச்சி அடித்தனர். மலர்களையும், ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அடுத்த சில நிமிடங்களிலேயே, அவர்கள் அணிந்திருந்த வெள்ளை நிற புடவைகள், வண்ணப் புடவைகளாக மாறின. இதில் பங்கேற்ற, கமலா என்ற பெண் கூறுகையில், ""கணவரை இழந்ததில் இருந்து, எந்த சுப நிகழ்ச்சியிலும், நான் பங்கேற்கவில்லை. இதனால், என் மனதில், ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கம், இப்போது நீங்கி விட்டது, என்றார்.மகாபாரத புராண கதைகளின் படி, கிருஷ்ண பகவான், தன் இளமை காலங்களில், பிருந்தாவன் நகரில் தான், வசித்தார் என, கருதப்படுகிறது. இந்நகரம், இந்துக்களின், புனித நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு, முதுமை காலத்தை நிறைவு செய்ய விரும்பும், விதவைப் பெண்களுக்கான, மடங்கள், ஏராளமாக உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar