பதிவு செய்த நாள்
18
மார்
2014
10:03
போடி: போடி அருகே, பிச்சாங்கரை மலையில், 2000 ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் கட்டப்பட்ட கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ பூஜைகளும் நடந்து வருகின்றன. சிவனை வேண்டி வணங்கினால், கால சர்ப்ப தோஷம், ராகு, கேது நிவர்த்தி, திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பவுர்ணமி பூஜையை முன்னிட்டு, சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. மேலச்சொக்கநாதர் கோயிலில், சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன. * போடி பரமசிவன் கோயிலில், சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.