அவலூர்பேட்டை: ஆரியபுரவடையில் மழை வளம் வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியத்தில் மழை பொய்த்து போனது. இதனால் வளத்தி ஊராட்சியில் உள்ள ஆரியபுரவடை கிராமத்தில் ஐயானாரப்பன் கோவிலில் மழை வளம் மற்றும் உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. கிராமத்தை சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.