சிவகங்கை: இலுப்பக்குடி வாழகுருநாதன்- அங்காள ஈஸ்வரி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம்தேதி முதல் 20ம்தேதி வரையுள்ள உத்திர யான காலத்திலும், செப்டம்பர் மாதம் 17ம்தேதி முதல் 29ம் தேதி வரையுள்ள தட்சணாயன காலத்திலும் சூரிய உதய நேரத்தில் அரை மணி நேரம் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுகிறது. இந்த ஆண்டு சுவாமி, அம்பாள் மீது விழுந்த சூரிய ஒளியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.