பதிவு செய்த நாள்
21
மார்
2014
10:03
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நேற்று காலை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோர், திருமணக்கோலத்தில், மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக, மதுரை கோவிலில் இருந்து புறப்பாடகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சொக்கநாதர், சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை, சுப்பிரமணிய சுவாமி வரவேற்றபின், கோவில் ஒடுக்க மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். இன்று காலை 6 மணிக்கு, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாளை (மார்ச் 22ல்) தீர்த்த உற்சவம் நடக்கிறது.