Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலம் முருகன் கோவிலில் 12ம் தேதி ... சோழீஸ்வரர் கோவில் மண்டபம் இடிக்க... ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2014
11:04

தர்மபுரி: தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பங்குனி தேர்த்திருவிழா, 13ம் தேதி நடக்கிறது. தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள விநாயகர், சிவசுப்பிரமணிய ஸ்வாமி பங்குனி உத்திர தேர்த்திருவிழா வரும், 6ம் தேதி, புற்று மண் எடுத்தல் மற்றும் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்குகிறது. மறுநாள், 7ம் தேதி விழாக்கொடியேற்றம், ஆட்டிக்கிடா வாகன உற்சவமும், 8ம் தேதி நரி வாகன உற்சவமும் நடக்கிறது. மறுநாள், 9ம் தேதி பூத வாகன உற்சவமும், 10ம் தேதி நாக வாகன உற்சவமும், 11ம் தேதி ஏராளமான பெண்கள் பங்கேற்கும் பால்குட ஊர்வலமும், தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடக்கிறது. இரவு, வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணி ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, தோரண வாயிலில் ஊஞ்சல் சேவையும், மயில் வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. 12ம் தேதி விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான, 13ம் தேதி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்பிரமணிய ஸ்வாமி மகா ரதத்தில் அருள் பாலிக்க, பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டம் நடக்கிறது. மாலை, 4 மணிக்கு, மகா ரதத்தை பக்தர்கள் இழுத்து நிலை பெயர்க்கும் விழா நடக்கிறது. அன்று காலை, 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 14ம் தேதி வேடர் பறி உற்வசம் நடக்கிறது. 15ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழாவும், கொடி இறக்கமும், 16ம் தேதி சயன உற்சவமும், 17ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, செங்குந்த சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar