Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் ... ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழீஸ்வரர் கோவில் மண்டபம் இடிக்க... விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2014
11:04

பெருந்துறை: பெருந்துறை, சோழீஸ்வரர் கோவிலில் உள்ள, சொற்பொழிவு மண்டபத்தை இடித்து விட்டு, மாவட்ட உலோக சிலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க, ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பழமையும், பெருமையும் வாய்ந்த பல நூற்றாண்டுகள் முன் கட்டப்பட்டது, சோழீஸ்வரர் கோவில். அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. கோவில் வளாகத்தில் சிறிய சொற்பொழிவு மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில், ஆன்மீக சொற்பொழிவுகள், விளக்கு பூஜைகள், சுவாமி திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இம்மண்டபத்தை அகற்றி விட்டு, அந்த இடத்தில், ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாமல் உள்ள, கோவில்களில் உள்ள உலோக சிலைகளை வைக்கும், பாதுகாப்பு மையம் கட்ட, அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக, 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உலோக சிலைகள் பாதுகாப்பு மையம், தமிழகத்தில் மொத்தம், ஏழு கோவில்களில் கட்டப்பட்டுள்ளது. காங்கேயம் சிவன்மலை முருகன் கோவிலிலும், உலோக சிலைகள் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது. பெருந்துறை சோழீஸ்வரர் கோவிலில் உள்ள, சொற்பொழிவு மண்டபத்தை அகற்றி விட்டு, உலோக சிலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டால், ஆன்மிக சொற்பொழிவுகள், விளக்கு பூஜைகள், சுவாமி திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த இடம் கிடையாது. மண்டபத்தை இடித்து விட்டு, உலோக சிலைகள் பாதுகாப்பு மையம் கட்ட, ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். கோவில் வளாகத்தில் எவ்வளவோ காலியிடங்கள் உள்ளன. அங்கு உலோக பாதுகாப்பு மைய கட்டிடம் கட்டிக் கொள்ளலாம். மக்கள் வசதிக்காக, பொதுமக்கள் நன்கொடையில் கட்டப்பட்ட மண்டபத்தை இடிக்கக்கூடாது. இதை கண்டிக்கிறோம், என, ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்த பரிஷத், மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 
temple news
நத்தம்: சிவன் கோயில்களில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar