சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் அருள்மிகு ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் கொடை விழாவையொட்டி 1,208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், இரவு 7 மணிக்கு 1,208 திருவிளக்கு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் , பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.