நத்தம் :திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஏப். 13-ம் தேதி பங்குனி உத்திர விழா நடக்கிறது. இவ்விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து விநாயகர் சன்னதியிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.