செஞ்சி : கருணசாயி பாபா கோவிலில் பாபா அவதார திருநாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2014 11:04
செஞ்சி: செஞ்சி தாலுகா காரியமங்கலம் மகாதேவி மங்கலம் கூட்ரோடு கருணசாயி பாபா கோவிலில் பாபாவின் அவதார திருநாள் விழா நடந்தது. சாயிபாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 7 மணிக்கு கேக் வெட்டி பக்தர்களுக்கு வழங்கினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.