மகாமகக்குளத்தில் ஆதிகும்பேசுவர சுவாமி கோவில் தெப்பத்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 01:04
கும்பகோணம்: கும்பகோணம் மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேசுவர சுவாமி திருக்கோவிலின் தெப்பத்திருவிழா மகாமகக்குளத்தில் நடந்தது. உலகில் முதன்முதலாக பிரளய காலத்தில் ஆதிகும்பேசுவர சுவாமி கோவில் தோன்றியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. இத்தகைய சிறப்புடைய இக்கோவிலில் மந்திர பீடேஸ்வரியாக மங்களாம்பிகை அம்மன் இறைவனின் இடது பாகத்தில் சன்னதி கொண்டுள்ளார். கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவங்களை போக்கிக்கொள்வதற்காக மகாமகக்குளத்தில் புனித நீராடி ஈசனையும், அன்னையையும் தரிசித்து பேறுபெற்றதாக ஐதீகம். அத்தகைய சிறப்பு பெற்ற மகாமகக் குளத்தில் ஈசனின் தேவியாக எழுந்தருளியுள்ள மலைமகளான மங்களாம்பிகை எனும் மந்திரபீடேஸ்வரிக்கு அலைமகளும், கலைமகளும் சாமரம் வீச மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மஙண்களாம்பிகை பவனிவந்து அருள்பாலிக்கும் தெப்பத்திருவிழா கண்டருளும் கழ்ச்சி நேற்றுமுன்தினம் ஞாயிறு காலை 10.30 மணிக்கு மேல் 11மணிக்குள் நடந்தது. தெப்பத்திருவிழா முன்னிட்டு இத்தெப்பத்தில் சிறப்பு நாதஸ்வரம் மற்றும் இன்னிசை கழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோவில் ர்வாகத்தினர் செய்திருந்தனர்.