சோழவந்தான் : சோழவந்தான் சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில், புனிதவெள்ளி பிரார்த்தனை நடந்தது. இயேசு பிரான் விடுத்த ௭ வாசகங்களை பாதிரியார் பென்சமின் போதித்தார். ராபின்சன்செல்வக்குமார், ஜான்சன்மனோகரன், ஆசிர்பிரபாகரன், சங்க செயலாளர் பென்சாம், ஜெயபிரியா பங்கேற்றனர். பின்னர் திருப்பலி ஜெப வழிபாடு நடந்தது. பைபிள் வேதத்தை படித்தபின், அனைவருக்கும் புனித தீர்த்தம் வழங்கப்பட்டது.