மானாமதுரை: மானாமதுரை அருகே கோச்சடை பகுதியில் சக்தி உமையாள் அம்மன், முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு கொடிபூஜை, நாடிசந்தனம் ஜெபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மேல் கோபுர உச்சியில் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பூரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் நடந்தது.