பதிவு செய்த நாள்
21
ஏப்
2014
10:04
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பலிஜவாரு மண்டகப்படியில் கள்ளர்வேடத்தில் சவுந்தராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கடந்த ஏப்.,13 ல் பல்லக்கில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டார். ஏப்.,14ல் முள்ளிப்பாடி ஆற்றில் எதிர்சேவை செய்தார். ஏப்.,15ல் திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி, பாலகிருஷ்ணாபுரம், திருமலைசாமிபுரம், நாகல்நகர், பாரதிபுரம்,சவுராஷ்டிராபுரம் ஆகிய இடங்களில் குதிரை, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பலிஜவாரு பொது மகாஜன அவதார மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு புஷ்பபல்லக்கில் கள்ளர்வேடம் தரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். டாக்டர் ராகவன், வக்கீல் ஸ்ரீராம்பாலாஜி, சம்பத்குமார், சிவக்குமார், ராஜ்குமார், சேஷாத்திரி, ராஜேந்திரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.