Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமநாதபுரம் சொக்கநாதர் கோயிலில் மே ... பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து சமய அறநிலையதுறை மண்டல இணை ஆணையர் நியமனம் எப்போது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2014
12:04

இந்து சமய அறநிலையதுறையில், சென்னை மண்டல இணை ஆணையர் பணியிடம், பல மாதங்களாக, காலியாக உள்ளதால், அறநிலையதுறை செயல்பாடுகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணிகள் சுணக்கம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 6,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றை, அறநிலையதுறை, நிர்வகித்து வருகிறது. அந்த மாவட்ட கோவில்களில் நடக்கும், அனைத்து சம்பவங்களுக்கும் அறநிலையதுறையே பொறுப்பு. ஆனால், பல மாதங்களாக, சென்னை மண்டல இணை ஆணையர் பணியிடம், காலியாக உள்ளது. இதனால், அறநிலையத்துறை பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னை மண்டல இணை ஆணையராக திருமகள் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு, திருவண்ணாமலை, அருணாச்சல ஈஸ்வரர் கோவில், கோசாலையில் உள்ள பசுக்களுக்கு, போதிய உணவளிக்காததால், இரண்டு கன்றுகள் இறந்தன. அதனால், திருவண்ணாமலை மண்டல இணை ஆணையராக பணிபுரிந்த பரஞ்சோதி, தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். அதனால், திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் பொறுப்பு, திருமகளுக்கு, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதனால், சென்னை, திருவண்ணாமலை மண்டலங்களின் இணை ஆணையராக, கூடுதல் சுமையுடன் பணிபுரிந்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன், கூடுதல் ஆணையராக (விசாரணை) பதவி உயர்வு பெற்றார்.

திருட்டு அதிகரிப்பு: கூடுதல் ஆணையர் (பொது) பதவி, கூடுதல் பொறுப்பாக, வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, திருமகள் கூடுதல் பொறுப்பு வகித்து வரும், எந்த பணியிடமும் நிரப்பப்படவில்லை. கூடுதல் சுமையுடன் தவித்து வருவதால், சென்னை மண்டல பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சமீபகாலமாக, கோவில்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, சென்னை மண்டலத்துக்கு, இணை ஆணையரை, உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே, பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar