Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி ... கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் நரேந்திர மோடி! கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் நரேந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா விடிய, விடிய பூச்சொரிதல் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 மே
2014
11:05

கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்றுமுன்தினம் அதிகாலை வரை, பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வரிசையில் நின்று வழிபட்டனர். தமிழகளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும், சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா நடப்பது வழக்கம். இதில், கரூர் மாவட்டம் மட்டுமன்றி, திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களும் ஆண்டுதோறும் பங்குபெற்று வருகின்றனர். நடப்பாண்டு வரும் 11 ம் தேதி கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதல் விழாவுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் அதிகாலை 4 மணிவரை, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தது. அலங்கரிப்பட்ட மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிப்பட்ட தேரில் அம்மன் ஊர்வலம் நடந்தது. 40க்கும் மேற்பட்ட பூச்சொரிதல் ஊர்வலம், கரூர் மாரியம்மன் கோவிலுக்கு, நேற்றுமுன்தினம் அதிகாலை வரை சேர்ந்தது. திருவிழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிக்கொண்டவர்கள், இன்று முதல் காப்பு கட்டி கொண்டு விரதம் இருக்க துவங்குகின்றனர். வரும் 26ம் தேதி திருத்தேர் ஊர்வலமும், 27ம் தேதி அக்னி சட்டி, அலகு, காவடி ஊர்வலம் 28ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடக்க உள்ளது. அன்றிரவு அமராவதி ஆற்றில் நடக்க உள்ள வாண வேடிக்கை திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். வரும்8ம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar