கள்ளக்குறிச்சி: தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி காலபைர வருக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று மாலை நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு நேற்று அஷ்டமி தின பூஜைகள் நடந்தது. சிறப்பு அபிஷேகங்கள் செய்து, அரளி பூக்களால் அலங்காரம் செய்த பின் 108 வடை மாலை சாற்றப்பட்டது. மகா தீபாராதனைக்கு பின் பெண்கள் அகல் தீபம் ஏற்றி வழிபட்டனர்.