Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று தத்தாத்ரேய ஜெயந்தி! பச்சையம்மனுக்கு மழை வேண்டி சிறப்பு வழிபாடு! பச்சையம்மனுக்கு மழை வேண்டி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப மலையில் பயங்கரம்: இடி தாக்கி மரங்கள் கருகின!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மே
2014
11:05

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப மலையில், இடி தாக்கியதில், ஏராளமான மரங்கள் தீப்பற்றி எரிந்து, நாசமானது. திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்தின் போது, தீபம் ஏற்றப்படும் மலையை, பக்தர்கள் வணங்கி வருகின்றனர். லிங்கமே மலையாக அமைந்த மலை. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் தலம். பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற இத்தலத்தில் மாதந்தோறும், பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள், மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். 2,668 அடி உயரம் கொண்ட, இந்த மலையின் மொத்த பரப்பளவு, 718 ஏக்கர்.

மூலிகை செடிகள்: இந்த மலையில், சந்தனம், கடுக்கன், தான்றிக்காய், அகில், நிலவேம்பு என, ஏராளமான மூலிகை செடிகளும், அரிய வகை மரங்களும் உள்ளன. மேலும், நீலமுக செண்பகம், கருங்கலை போன்ற அரிய வகை பறவைகளும், சிங்கவால் குரங்கு, புள்ளிமான், முள்ளம்பன்றி, எறும்புத்தின்னி போன்ற விலங்குகளும் வாழ்கின்றன.

இடியுடன் மழை: இந்நிலையில், திருவண்ணாமலை பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி அளவில், திடீரென இடியுடன் கூடிய, லேசான மழை பெய்தது.அப்போது, மலை மீது, இடி விழுந்தது. இதில், மலையில் இருந்த மரங்கள், தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து, தகவல் அறிந்த, வன துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து, நள்ளிரவு, 1:00 மணி அளவில், போராடி தீயை அணைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar