அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அருகே மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் கோவில்புரையூர் தித்திக்கொல்லை வேடியப்பன் கோவிலில் மழை வளம் வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு பச்சையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.