Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சோழவந்தான் கோயிலில் கத்தி சாத்தும் ... சிவன் கோயில் மண்டப சுவர் இடிந்து விழுந்தது! சிவன் கோயில் மண்டப சுவர் இடிந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாம்பே ஞானம் குழுவினரின் பக்தி நாடகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மே
2014
11:05

கோவை: கோவையில், மகாலட்சுமி பெண்கள் நாடக குழு சார்பில் ‘ஸ்ரீ பகவான்  நாம போதேந்திராள்  என்ற பக்தி நாடகம் நேற்று ஆர்.எஸ்,புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. போதேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை, இரண்டு மணி நேரத்தில் விளக்கும் வகையில், ரத்தின சுருக்கமாக அமைக்கப்பட்டது, இந்த நாடகம். தெளிவான ஒளி, ஒலி மற்றும் அரங்க  அமைப்புடன் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் நடித்துள்ள அனைவரும் பெண்கள்.  நாடக இயக்குனர் பாம்பே ஞானம் கூறியதாவது: இன்றைக்கு நகைச்சுவையை மையமாக வைத்து தான் அதிகம்  நாடகங்கள் நடத்தப்படுகின்றன. சமூக பிரச்னைகளை குறித்த நாடகங்களும் நடத்தப்படுகின்றன. மக்களின் மனதில் பக்தியை வளர்க்க கூடிய நாடகங்கள் யாரும் நடத்துவதில்லை. இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு பக்தி உணர்வும், கடவுள் நம்பிக்கையும் தேவை. பகவான் மனித ரூபத்தில் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்.  அப்படி அவதரித்தவர்கள் தான் காமகோடி பீட ஆச்சாரியார்கள். ஆன்மீகத்தை, தெய்வ  நம்பிக்கையையும் மக்களுக்கு போதித்து நல்வழிப்படுத்தவே இந்த மகான்கள் உலகத்தில்  அவதரித்தனர்.  அவர்களில் ஒருவர்தான் பகவான் போதேந்திரர். அப்படிப்பட்ட மகானின்  வாழ்க்கை வரலாற்றை நடகமாக நடத்தி வருகிறேன். இவரை 19 இடங்களில் இந்நாடகம் நடத்தப்பட்டுள்ளது. நடத்திய இடங்களில் எல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாடகத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு செல்லும் பார்வையாளர்கள் ராம நாமத்தை உச்சரித்து கொண்டே வீட்டுக்கு செல்கின்றனர். இது தான் இந்நாடகத்தின் வெற்றியாகும். இவ்வாறு ஞானம் கூறினார். இந்நாடகம் இன்று மாலை 4.00 மணி மற்றும்  இரவு 7.00 மணி என, இரண்டு காட்சிகள் நடக்கிறது. அனுமதி இலவசம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar