Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாம்பே ஞானம் குழுவினரின் பக்தி ... திருமலையில் அனுமன் ஜெயந்தி சிறப்பு அபிஷேகம்! திருமலையில் அனுமன் ஜெயந்தி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோயில் மண்டப சுவர் இடிந்து விழுந்தது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மே
2014
11:05

காரைக்குடி: கோயில் மண்டபத்தின், கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து, 4 பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். 2 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காரைக்குடி சிவன்கோயில் வீதியில், உள்ள சிவன் கோயிலில், 42 அடி அகலம், 48 அடி நீளத்திற்கு, முன் மண்டபம் கட்டும் பணி, கடந்த 4 மாதங்களாக நடந்து வருகிறது. கடந்த மே 21ல், கான்கிரீட் போடப்பட்ட நிலையில், நேற்று மேல் மட்டத்தில், பீம் அமைக்கும் பணி நடந்தது. 15க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மதியம் 2:30 மணிக்கு, மண்டபத்தின் மேற்கூரை பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. மண்டபத்தின் மேல், கட்டட பணியில் இருந்த அரியக்குடி சிட்டாள்,42, மணச்சை கண்ணன்,42, கோட்டையூர் உமையாள்,45, பெரியகோட்டை நாகராஜ்,35, அழகாபுரி கலா,34, கோட்டையூர் ராக்கு,35, எஸ்.கணேசன்,32, புதுவயல் பி.பழனியப்பன்,43 காயமடைந்தனர். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான வீரர்கள், காயமடைந்தவர்களை தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எஸ்.கணேசனின் விலா எலும்பில், கட்டை குத்தியதாலும், பி.கணேசனுக்கு நெற்றியில் அடிபட்டதாலும், அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.காரைக்குடி தெற்கு போலீசார் இன்ஜினியரிங் சூப்பர்வைசர் சரவணனிடம், பிளான் போட்டு கொடுத்தது யார்? எதற்காக அவசர கோலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது, என விசாரிக்கின்றனர்.விபத்து நடந்த நேரம் மதியம் 2:30 மணி என்பதால், கோயில் நடை மூடப்பட்டிருந்தது. இதனால், உயிர் சேதம் இல்லை. கடந்த 2 நாளுக்கு முன்பு தான், மேற்கூரை கான்கிரீட் போடப்பட்டுள்ளது. அதன் ஈரம் காய்வதற்குள் பீம் அமைக்கும் வேலையை ஆரம்பித்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, என காயமடைந்தவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar