மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. பாதிராப்புலியூர் சிவன் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு நடந்த மகா தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிவபெருமானுக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு மகா தீபாரதனை, வழிபாடு நடந்தது.ஆலகிராம எமதண்டீஸ்வர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு திரிபுரசுந்தரிக்கு நடந்த அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலம் சுந்தரவிநாயகர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். மாலை 6 மணிக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.