Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆந்திராவில் ஸ்ரீனிவாச கல்யாணம் ... மூடப்பட்ட அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை கோவில் திருமதில் சுவர் புதுப்பிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2014
02:05

காங்கயம் : சிவன்மலை கோவில் திருப்பணியின் போது, திருமதில் சுவரின் பழமை மீட்கப்பட்டு, மீன், யாழி உள்ளிட்ட புடை சிற்பங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகம் கடந்த 2000 செப்.,10ம் தேதி நடந்தது. 14 ஆண்டுகள் கழித்து, ஜூலை 4ம் தேதி மீண்டும் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, கடந்த இரண்டு ஆண்டாக திருப்பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக ராஜகோபுரம் 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில் சிற்ப நுண்கலை வேலைப்பாடுகள் மிகுந்த நிலைக்கதவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 90 லட்சம் ரூபாய் செலவில் சுற்று பிரகார மண்டபம், 20 லட்சம் ரூபாய் செலவில் பாவு தளம், மண்டப தூண்கள், சுற்று பிரகார பகுதிகளில் சுதை, பூதங்கள் 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.மூலவர், பரிவார சன்னதிகள், கோவில் வளாகம் முழுவதும் 50 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசும் பணி என மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்துள்ளன. சுற்று பிரகார மண்டபங்கள், முன் மண்டபம் மற்றும் மலை சுவர்களில் அழகான ஓவியங்கள், சிவமலை குறவஞ்சி பாடல்கள் எழுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கோவில் திருமதில் சுவர் முழுவதும் பழமையை மறைத்து சுண்ணாம்பு காரை பூசப்பட்டு வந்துள்ளது.பல ஆண்டுகளாக திருமதில் சுவருக்கு வெள்ளை மட்டும் பூசப்பட்டு வந்த நிலையில், இப்போது திருமதில் சுவரின் பழமையை மீட்கப்பட்டுள்ளது. சுவற்றில் இருந்த காரைப்பூச்சு முற்றிலும் அகற்றப்பட்டு, அமோனியா கரைசல், நான் அயர்னிக் டிடர்ஜென்ட், சோடியம் ஹைட்ராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்களால் கழுவப்பட்டு, பழமையான கற்கார சுவர் மீட்கப்பட்டது. மேலும், சிமெண்ட் மற்றும் மணல் மாவு போல் அரைக்கப்பட்டு, தண்ணீர் புகாத மற்றும் செடிகள் முளைக்காத ரசாயன கலவை கொண்டு, கற்கள் இணைப்புகளில் "கெமிக்கல் பாயின்டிங் செய்யப்பட்டுள்ளது. இதனால், திருமதில் சுவரில், யானை, யாழி, குரங்கு, மீன் உள்ளிட்ட பல அழகான புடை சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கோவிலின் பழமை மீட்கப்பட்டுள்ளதால், கற்கார மதில் சுவர் பக்தர்கள் கவர்ந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar