Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவகோட்டையிலிருந்து ... குன்னூர் கருமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2014
02:05

ஈரோடு: விவசாய பூமியாக மாற்றப்பட்ட, கோவிலுக்கு சொந்தமான பாதையை, ஊர் பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்று கோரி, அந்தியூர் தாலுகா, வீரனூர் நகலூர் கிராம மக்கள், கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: வீரனூரில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். ஊருக்கு தெற்கே, ஓம் காளியம்மன், முத்து முனியப்பன், மதுரை வீரன் கோவில்கள் உள்ளன. கடந்த, நான்கைந்து தலைமுறைகளாக விழா நடத்தி வருகிறோம். கோவிலுக்கு பூர்வீக வகையில், வண்டிபாதை இருந்தது. தற்போது, வண்டிபாதையை, தனி நபர் ஒருவர் ஆக்ரமித்து, தனது பட்டா நிலத்துடன் சேர்த்து கொண்டுள்ளார். மேலும், உழவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அரசு ஆவணங்களில் வண்டிபாதை என்று தான் உள்ளது. கடந்த, நான்கு மாதங்களுக்கு முன், இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்தோம். வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மற்றும் சர்வேயரிடம் தெரிவித்து இருந்தோம். தேர்தல் முடிந்தவுடன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும், என்று உறுதி அளித்து இருந்தனர். ஓட்டு எண்ணிக்கை முடிந்து, எட்டு நாட்களான பின்னரும் கூட, எங்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. வண்டி பாதையை தனி நபர் ஆக்கிரமித்து இருப்பதால், சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் ஆண்டு திருவிழாவை கொண்டாட முடியவில்லை. கோவிலுக்கு சொந்தமான வண்டிபாதையை, மீண்டும் எங்கள் வசமே ஒப்படைக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள அரசு ஆவணங்களை பார்த்து, வண்டிபாதையை உறுதி செய்து, அதனை மீட்டு எங்களிடம் வழங்க வேண்டும், என, கேட்டுகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar