Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்கால் கந்துாரி விழா ... ஸ்ரீவி., வைத்தியநாதசுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் வைகை ஆற்றில் தர்ப்பணத்திற்கு அடாவடி வசூல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2014
02:05

திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க வருபவர்களிடம், அடாவடி வசூல் நடப்பதாக, புகார் எழுந்துள்ளது. திருப்புவனம், புஷ்பவனேஷ்வரர் கோயில் முன் உள்ள நந்திக்கும் மடப்புரம் கரையில் உள்ள நந்திக்கும் இடையே வைகையாற்றில் 21 புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாகவும் முன்னோர்களின் அஸ்தியை இங்கு கரைப்பதன் மூலம் காசிக்கு சென்று கரைப்பதற்கு ஒப்பாகும். இதனால் அமாவாசை மற்றும் பிற நாட்களில், ஆயிரக்கணக்கானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகின்றனர். தற்போது, வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. இதனால், தனியார் சிலர் ஆற்றில் ஊற்றுக்களை தோண்டி, தர்ப்பணம் கொடுக்க வருபவர்களிடம், ரூ.100 முதல் 500 வரை கட்டாய வசூல் செய்கின்றனர். இது குறித்து, பல முறை எழுந்த புகாரை தொடர்ந்து, பொதுப்பணி, வருவாய், போலீஸ் துறை இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேரூராட்சி சார்பில் சிமிண்ட் தொட்டி கட்டினர். தர்ப்பணம் செய்வதற்கு, நபருக்கு ரூ.20 மட்டுமே வசூலிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி, தொடர்ந்து, தர்ப்பணம் செய்ய வருபவர்களிடம், அடாவடி வசூல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, செயல் அலுவலர் செந்தில் கூறுகையில்,"" கோயிலில், நிர்ணயித்த கட்டணம் தான் வாங்கவேண்டும். பேரூராட்சி சார்பில், தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. தேவஸ்தானம் சார்பிலும், தண்ணீர் தொட்டி கட்டப்படும். தனியார் சிலர், ஆக்கிரமித்து கட்டியுள்ள தொட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, மின்சப்ளையை துண்டிக்க கூறியும், மின்வாரியம் மெத்தனமாக உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar