பதிவு செய்த நாள்
07
ஜூன்
2014
11:06
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று பக்தர்கள், 30 மணி நேரம் காத்திருந்தனர். திருமலையில், இரண்டு வாரங்களாக, பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தர்ம தரிசன பக்தர்கள், நேற்று 30 மணி நேரமும், பாதயாத்திரை பக்தர்கள், 15 மணி நேரமும் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மதியத்திற்குள், 15 ஆயிரம் பேர் வழிபட்டதால், 300 ரூபாய் விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 33,655 பேரும், நேற்று முன்தினம், 77,741 பேரும் ஏழுமலையானை தரிசித்தனர். நேற்று மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள், 31 காத்திருப்பு அறைகளைத் தாண்டி, 2 கி.மீ., தூரத்திற்கும். பாத யாத்திரை பக்தர்கள், 15 காத்திருப்பு அறைகளைத் தாண்டி, 1 கி.மீ., தூரத்திற்கும் வரிசையில் நின்றிருந்தனர்.