பதிவு செய்த நாள்
25
ஜூன்
2014
11:06
திருத்தணி : இரண்டு கிராமங்களில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது.
திருத்தணி ஒன்றியம், வி.சி.ஆர்.கண்டிகை மற்றும் வி.கே.ஆர்.புரம் ஆகிய கிராமங்களில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா, நேற்று நடந்தது. விழாவை ஓட்டி காலை, 8:00 மணிக்கு அம்மன் கோவில் வளாகத்தில், கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.காலை, 10:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, 7:30 மணிக்கு, பூ கரகத்துடன், களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 10:00 மணிக்கு நாடகம் நடந்தது.