Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைஷ்ணவ தேவி, துளசி முனிவர் உருவம் ... அக்காசுவாமி கோவிலில் இன்று குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தர் மண்டபத்தில்ரசாயன கலவை பூசும் பணி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2014
12:07

நாகர்கோவில்:கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை கட்டடங்கள் உப்புக்காற்றால் அரிப்பதை தடுக்க ரசாயன கலவை பூசும்பணி தொடங்கியது. சுவாமி விவேகானந்தர் 1892ம் ஆண்டு கன்னியாகுமரி வருகை தந்தார். அப்போது, கடலில் நடுவே உள்ள பாறையில் பகவதி அம்மனின் பாதம் பதிந்துள்ள இடத்தில் டிசம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் அமர்ந்து தியானம் செய்தார். இதன் நினைவாக அந்த பாறையில் 1964ல் சுவாமி விவேகானந்தர் மண்டபம் கட்டும் பணி தொடங்கியது. 1970ல் இந்த மண்டபத்தை அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரி திறந்து வைத்தார். இந்த மண்டபத்தை விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் பராமரித்து வருகிறது. மண்டபம் கட்டப்பட்டு 44 ஆண்டுகளான நிலையில் கடலின் உப்பு காற்றால் மண்டபம் பாதிக்கப்படுவதை தடுக்க ரசாயன கலவை பூச முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மண்டபத்தின் மேற்கூரையில் இரும்பு கம்பிகளால் சாரம் அமைத்து 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரசாயன கலவை கலந்த சிமெண்டை பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கூரையில் உள்ள இடைவெளி வழியாக உப்புக்காற்று மண்டபத்துக்குள் புகுவதை தடுக்க ரூ.5 லட்சம் செலவில் இந்த பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே, திருவள்ளுவர் சிலைக்கு உப்புக்காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க ரசாயன கலவை அண்மையில் பூசப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
டில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த ... மேலும்
 
temple news
அவிநாசி : சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேவூரில், பழமை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் 5ஆம் விழாவில் உலகிலேயே பெரிய ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar