Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோனியம்மன் கோவில் கோபுர ... ஜூலை 9ல் விளாச்சேரி ராமர் கோயில் கும்பாபிஷேகம்! ஜூலை 9ல் விளாச்சேரி ராமர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தர் நினைவு தினம் அரிசியை குவித்து மகா அன்னபூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2014
11:07

நாகர்கோவில்: சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் மகா அன்னபூஜை நடைபெற்றது.சுவாமி விவேகானந்தர் 1902 ஜூலை 4-ம் தேதி மகா சமாதி அடைந்தார். அவர் மகா சமாதி அடைந்து 112 வருடம் ஆவதையொட்டி நேற்று கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் விவேகானந்தா கேந்திர அரங்கில் அன்ன பூஜை நடந்தது. இதற்காக நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நன்கொடையாக சேகரிக்கப்பட்ட 20 டன் அரிசியை மலைபோல் குவித்து வைத்து அன்ன பூஜை நடந்தது.மேலும் ஆதி சங்கரர் அருளிய அன்ன பூரண சோஸ்திரம், பகவத் கீதை விசுவரூப தரிசனம் ஓதப்பட்டது. தொடர்ந்து பெண்கள் குத்துவிளக்கேற்றினர். விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் அன்ன பூரண பூஜை பற்றி விளக்கி பேசினார்.தொடர்ந்து தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பகவத் கீதை, விசுவரூப தரிசனம் நடந்தது. பின்னர் அன்ன பூஜை அரிசியை கேந்திராவுக்கும், பல்வேறு அமைப்புகள் நடத்தும் ஆசிரமங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்த பூஜைக்கு விவேகானந்தா கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கேந்திர நிர்வாக செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்த ராவ், ஆயுள் கால தொண்டர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு அதிகாரி ரகுநாதன் நாயர், நிர்வாக அதிகாரி கிருஷ்ணசாமி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar