Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை கோவில் கும்பாபிஷேகம் ... விவேகானந்தர் நினைவு தினம் அரிசியை குவித்து மகா அன்னபூஜை! விவேகானந்தர் நினைவு தினம் அரிசியை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோனியம்மன் கோவில் கோபுர கலசங்கள் கம்பீர உலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2014
11:07

கோவை: கோனியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் ஸ்தாபிப்பதற்காக வேள்வியில் வைக்கப்பட்ட, ஒன்பது ராஜகோபுரகலசங்கள் நேற்று கோவை நகர வீதிகளில், கம்பீரமாக திருவீதி உலா வந்தன; பக்தர்கள் பயபக்தியோடு தங்கக்கலசங்களை தரிசனம் செய்தனர்.கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில், ஒன்பது தங்ககலசங்களோடு கூடிய, ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையிலுள்ள தங்க நகை தயாரிப்பாளர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து, ராஜகோபுரத்தில் வைப்பதற்கான தங்கக்கலசங்களை கோவிலுக்கு சமீபத்தில் வழங்கினர்.ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் ஸ்தாபிக்ககூடிய ஒன்பது கலசங்கள் ஒவ்வொன்றும் நான்கரை அடி உயரத்தையும், ஒன்றரை அடி அகலத்தையும் கொண்டவை. இதில் ஆறு அடுக்குகளில் தங்கரேக்குகள் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. நேற்று கோனியம்மன் கோவிலில் ஒன்பது கோபுரகலசங்களையும் வைத்து மலர்மாலைகள் அணிவித்து,வேள்வி நடத்தப்பட்டது. வேள்வியில் வேதவிற்பன்னர்கள் வேதங்களை ஓத புனித தீர்த்தம் கோபுரகலசங்களின் மீது ஊற்றினர். அதன் பின், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்க கோபுரகலசங்கள் எழுந்தருளுவிக்கப்பட்டு, கோவிலிலிருந்து கோவை நகர வீதிகளில், தங்ககலசங்கள் வீதிஉலாவாக வந்தன.பெரியகடைவீதி, சலிவன்வீதி, கருப்பகவுண்டர்வீதி, ராஜவீதி, பெரியகடைவீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. நகர் முழுக்க வீடுகளின் முன் நின்றிருந்த பக்தர்கள் ராஜகோபுரத்தில் அமையப்போகும் தங்க கலசங்களை இருகரம் கூப்பி வழிபாடுசெய்தனர்.இன்னும் சிலர் தேங்காய் பழம் வெற்றிலை, மங்கலப்பூக்களை நிறைத்து, கோபுரக்கலசங்களுக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தனர்.ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் கான்கிரீட் சிமென்ட் பகுதி இனியும் தயார் நிலையில் இல்லாததால் கோபுரக்கலசங்களை கோபுரத்தின் மீது பொருத்தும் பணிகளை, ஜூலை 9க்கு கோவில் நிர்வாகம் மாற்றம் செய்து வைத்துள்ளது. அன்றைய தினம் காலை கோபுரகல சங்கள் ஸ்தாபனம் செய்யப்படும். தங்ககோபுர கலசங்கள் திருவீதி உலா நிகழ்ச்சியை ஒட்டி கோவில் மற்றும் தங்ககலசங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று முதல் ராஜகோபுர கும்பாபிஷேக விழாவை ஒட்டி அன்றாடம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்காக கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar