Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... வேம்புலி அம்மன் கோவிலில் நவகலச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டாய வசூல்: பக்தர்கள் அதிருப்தி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2014
02:07

சிவகங்கை : சிவகங்கை,பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வாகனங்களில் வருவோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிவகங்கை, பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில், 60 வது ஆண்டு பூச்சொரிதல் விழா, ஜூலை 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. முக்கிய நாளான, ஜூலை 11 அன்று, காலை சிறப்பு பாலாபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், மாலை பூச்சொரிதல் விழா நடக்கும். அன்று, நகரில் உள்ள பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்தி, ஊர்வலமாக, கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு பூச்சொரிதல் செய்வர். இது தவிர, அன்றைய தினம், பொங்கல், மாவிளக்கு, பிள்ளைதொட்டி கட்டுதல், முடி இறக்கும் நேர்த்தி செய்வர்.

கட்டாய வசூல்: நகர் மட்டுமின்றி, சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி கும்பிட செல்வர். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் டூவீலருக்கு ரூ.2, 3 சக்கர வண்டிக்கு ரூ.3, கார்களுக்கு ரூ.5 மட்டுமே வசூலிக்க, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், வாகன வசூலில் ஈடுபடுவோர், உத்தரவை மீறி, டூவீலருக்கு ரூ.10, மற்ற வாகனங்களுக்கு ரூ.20 வீதம் கட்டாய வசூல் செய்கின்றனர். தர மறுக்கும் பக்தர்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. பக்தர்கள் அதிருப்தியுடன் கோயிலுக்கு செல்கின்றனர். கோயில் செயல் அலுவலர் ஆர்.இளையராஜா கூறுகையில்,"" அறநிலையத்துறை நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க கூறியுள்ளோம். கூடுதலாக வசூலிப்பது குறித்து, புகார் வந்தது. இதையடுத்து, கட்டணம் வசூலிப்பவரை கண்டித்துள்ளேன். இனிவரும் நாட்களில், கூடுதலாக வசூலிப்பது தடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar