திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், பத்து நாட்கள் தொடர்ந்து நடக்கும், இந்தாண்டு சித்திரை வசந்த உற்சவ விழா,சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகமும், இரவில் சுவாமிக்கு மண்டபடியும் நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவாக, 10 நாளான இன்று ஐயங்குளத்தில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சித்திரை வசந்த பிரம்மோற்சவ நிறைவு விழாவையொட்டி, இன்று குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.