புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவிலில் கருட சேவை நடந்தது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹய க்ரீவர் கோவிலில் 43வது ஆண்டு திருப்பவித்ரோத்சவம் கடந்த 4ம் தேதி துவங்கியது. அன்று மாலை அனுக்ஞை, 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் 90 திருவாராதனம் நடந்தது. நேற்று காலை கருடசேவை நடந்தது. அதையடுத்து அவப்ருதம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை நடந்தது. விழா ஏற்பாடுகளை லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவில் சிறப்பு அதிகாரி மற்றும் லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் பக்த ஜன சபையினர் செய்திருந்தனர்.