Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்னிந்தியாவில் மிகப்பெரிய ... செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்! செல்வ விநாயகர் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிலத்தில் இருந்து சாமி சிலை முளைத்ததாக திருப்பூரில் நாடகம்: பொதுமக்கள் முற்றுகை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2014
12:07

திருப்பூர் :திருப்பூரில், நிலத்தில் இருந்து சுவாமி சிலை வந்ததாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில், சொத்தை கைப்பற்ற நடத்தப்பட்ட நாடகம் என தெரியவந்ததை தொடர்ந்து, சிலையை தோண்டி எடுத்தனர்.திருப்பூர், பிராசரர் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 45; இவரது வீட்டில் வைத்திருந்த அரிசி மூட்டைக்கு கீழ், நிலத்திலிருந்து புற்றுக்கண் மற்றும் எல்லம்மன் சிலை வெளியே வந்ததாக தெரிவித்தார்.இச்செய்தி பரவியதையடுத்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து, வழிபட்டு சென்றனர். அவரது அண்ணன் சின்னசாமி, சுவாமி அருள் வந்ததாக கூறி, பக்தர்களுக்கு திருநீறு கொடுத்து வந்தார். சுற்றிலும் புற்று அமைப்போடு, அம்மன் சிலை புதிதாக கான்கிரீட்டில், கோவில் கோபுரங்களில் வைக்கப்படும் சுதைபோல் காணப்பட்டது. சின்னசாமி ’உனது வீட்டிற்குள் எல்லம்மன் வந்துள்ளார்; சென்று பார்,’ என கூறியுள்ளார்.இதற்கு அவரது தங்கை ஜெயா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், ”வீட்டை அபகரிக்க, சின்னசாமியும், பழனிசாமியும் நாடகமாடுகின்றனர். திடீரென எப்படி சுவாமி சிலை முளைக்கும்; மோசடி செய்கின்றனர்,” என்றார்.இத்தகவல் கிடைத்ததும், வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் குழி தோண்டி, புதிதாக கான்கிரீட் போட்டு, சிலையை வைத்து சுற்றிலும், புற்றுபோல் மண் அமைத்துள்ளனர். வீட்டை அபகரிக்கவே நாடகமாடியுள்ளனர் என தெரிந்தது. சிலையை போலீசார் தோண்டி எடுத்து, வீட்டில் வைத்து பூட்டினர். பின், பொதுமக்களை ஏமாற்றி, பரபரப்பை ஏற்படுத்திய சின்னசாமி, பழனிசாமி ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
சாத்தான்குளம்; சாத்தான்குளம் குலசை., ரஸ்தா தெரு,உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. ... மேலும்
 
temple news
சபரிமலை; வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar