பதிவு செய்த நாள்
10
ஜூலை
2014
12:07
உளுந்தூர்பேட்டை: செம்பியன்மாதேவி கிராமத்தில் கணபதி, சீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள், திரவுபதியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 7ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாரதனை நடந்தது. நேற்று முன்தினம் வித்யா கணபதி பூஜை, புண்யாவாசனம், துவார பூஜை, வேதபாராயணம், லட்சுமி கணபதி பூஜை, வேதசார்ச்சனை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், தீபாரதனை நடந்தது. நேற்று காலை சக்தி கணபதி பூஜை, புண்யாக வாசனம், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடும் நடந்தது. காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. 9.45 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு திரவுபதியம்மன் கோவில் விமானம் கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு சபரிவார கோயில் விமானத்திற்கு கும்பாபிஷேகம், 10.45 மணிக்கு மூலஸ்தான கும்ப அபிஷேகம், மகா அபிஷேகம், தீபாரதனை நடந்தது.