பதிவு செய்த நாள்
10
ஜூலை
2014
12:07
சிதம்பரம்: தருமையாதீனம் சார்பில் சிதம்பரத்தில் 3 நாட்கள் நடந்த பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு நிறைவு நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமையாதீனம் மடம் சார்பில் பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்றம் விழா கடந்த 6ம் ÷ ததி துவங்கியது. நிறைவு விழாவில் கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்றார். விழாவையொட்டி, திருமுறை கலாநிதி திருப்பந்தாள் முத்து கந்தசாமி, ÷ தசிக ஓதுவார் திருமுறை இன்னிசை நடந்தது. திருக்குவளை தியாகராஜ சுவாமி தேவஸ்தான ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் வர÷ வற்புரையாற்றினார். சைவ சித்தாந்த புலவர் ஞானஸ்கந்த தீட்சிதர் தலைமையுரையாற்றினார். தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகா சந்நிதானம் சத்திய ஞான மகாதேவ பிரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். திருப்பனந்தாள் ஸ்ரீ காசி திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் மவுன தேசிக மடாலயம் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பாடசாலை முதல்வர் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு பாடசாலை முதல்வர் ராஜா பட்டர், மயிலாடுதுறை வேதபுரம் சிவகாம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார், மதுரை விஜய ராகவன், தியாகராஜன், ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை மாணிக்கவாசகம், பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தொழில் அதிபர் சுவேதகுமார் நன்றி கூறினார்.