கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகில் விநாயகர், அய்யப்பன், பாலசுப்ரமணியர், துர்க்கை அம்மன் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது. நான்கு காலங்களாக பிரித்து பூஜைகள் செய்தனர். 7ம் தேதி காலை விநாயகர் வழிபாடு, ரக்ஷா பந்தனம், கங்கா பூஜைகளுடன் விழா துவங்கியது. கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடந்தது. நேற்று காலை பசு பூஜை, சூரிய பூஜை, நாடிசந்தானம் நடத்தியபின் கோவில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இன்று முதல் 48 நாட்கள் மண்டல பூஜைகள் செய்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த பழைய மாமாந்தூரில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வைபவம் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.