Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி சிற்பியால் உருவான தங்க ... வக்ரகாளியம்மன் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2014
02:07

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா 9 ம்நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. 2ல் காப்புகட்டுதலுடன் பத்து நாள் விழா துவங்கியது. தினமும் கோயிலில் சிறப்பு பூஜை, இரவு பகல் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, எட்டாம் நாள் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை பிரியாவிடை சமேத சொக்கநாதர் பெரியதேரிலும், மீனாட்சி அம்மன் சிறியதேரிலும், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சப்பரத்திலும் தேரோடும் வீதியில் உலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்தனர்.இரவு அரசுப்பணியாளர்கள் 50 வது ஆண்டுபொன்விழா கலை நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் ஊராட்சி தலைவர் சி.சத்தியமூர்த்தி, அம்பலகாரர் சி. விஸ்வநாதன்,கூட்டுறவு சங்க தலைவர் சொ.திருவாசகம், பொதுப்பணித்துறை மேலாளர் (ஓய்வு) சொ.சண்முகம், அ.தி.மு.க.,கிளை செயலாளர் செ.ரவிச்சந்திரன். சுப.மணிவண்ணன், குருக்கள் ஆர் குமார்.எஸ்.எஸ்.டைனமிக் பொன்பாஸ்கரன்,சுப்பையா இன்டஸ்ரீஸ் பெரி.சுப்பையா,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) சொக்கலிங்கம்,விவசாய நீர்பாசனத்துறை வட்டார தலைவர் பெரி.சதாசிவம்,ராம.ரவி டைலர் பங்கேற்றனர். முறையூர் கிராமத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பாகனேரி: பாகனேரி புல்வநாயகியம்மன் கோயில் ஆனித்தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 2 தேதி காப்புக்கட்டுடன் தொடங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக வருடத்தில் ஒரு முறை மட்டும் உலா வரும் சாமுண்டீஸ்வரி ஊர்வலம் நடைபெற்றது.9ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை தேங்காய் போடுவது முடிந்ததும் பெரிய தேரில் புல்வநாயகியம்மனும், சிறிய தேரில் வினாயகரும் வீற்றிருக்க 5.55மணிக்கு தேரோட்டம் தொடங்கி நான்கு ரத வீதிகள் வழியாக6.45 க்கு தேர் நிலைக்கு வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம்  பகுதியில் வைத்தியபுரி ஸ்ரீ மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு, வாரணாசியில் கங்கை நதியில் புனித நீராட ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar