திருவெண்ணெய்நல்லுõர்: திருவெண்ணெய்நல்லுõர் மெய்கண்டார் கோவிலில் மாதாந்திர சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. திருவெண்ணெய்நல்லு õரில் சைவ சித்தாந்தத்தை உலகுக்கு உணர்த்திய மெய்கண்டாரின் ஜீவசமாதி உள்ளது. இங்கு திருவண்ணாமலை சைவ சித்தாந்த பயிற்சி மையம் சார்பில் மாதாந்திர சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு திருமுறை விண்ணப்பமும், 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேமும், தீபாராதனையும் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மாகேஸ்வர பூஜை நடந்தது. ஏற்பாடுகளை பேராசிரியர் சுப்ரமணியன், பயி ற்சி மைய அமைப்பாளர் அரவிந்த், ஓதுவார் கணேசன், மகேந்திரன், ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.